Custom Search

Vijay's Jilla 2014 Movie Review in tamil| Vijay, Kajal Agarval, Mohanlal

ஊர் பெரிய மனிதர் சாக கிடக்கிறார். அரசியல் எதிரிகளால் அந்த பெரிய மனிதரின் மகன் படுகொலை செய்யப்பட, இளம் விதவை ஆகிறார் பூர்ணிமா பாக்யராஜ். சாகக்கிடக்கும் தருவாயில் இருக்கும் பெரியவர் தன்னுடைய விதவை மருமகளை மோகன்லால் திருமணம் செய்துக் கொள்ள வேண்டுமென்று ஒரு ‘பேக்கரி டீலிங்’ ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார். இதனால் அவரது அடுத்த அரசியல் வாரிசாக மோகன்லால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒரு ஆண், ஒரு பெண் என்று இரண்டு குழந்தைகளின் தாயான பூர்ணிமா பாக்யராஜை மோகன்லால் மணந்துக்கொண்டு வாக்குறுதியை காப்பாற்றுகிறார். பூர்ணிமாவின் மகன் தான் இளைய தளபதி விஜய். பிற்பாடு மோகன்லாலுக்கும் அவருக்கும் இன்னொரு உருப்படாத மகன் பிறக்கிறான். மகத்.
அரசியலில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து மாநில அளவில் பெரிய மனிதராகிறார் மோகன்லால். கட்டிவர சொன்னால் வெட்டிவர தயாராக வளர்ந்து நிற்கிறார் விஜய். ஆனால் மகத்தோ வெட்டியாக ஊர் சுற்றிக்கொண்டு, கண்ணில் படும் பெண்களை ரேப் செய்துக்கொண்டு, டோபு அடித்துக்கொண்டு வெளங்காவெட்டியாக உருவெடுக்கிறார்.
அரசியலில் விஜய்க்கு மோகன்லால் முக்கியத்துவம் கொடுப்பதை ஆரம்பத்திலிருந்தே மகத் விரும்பவில்லை. இளைஞரணித் தலைவர் பதவியை விஜய்க்கு தருவதை கடுமையாக எதிர்க்கிறார். ஆனாலும் மோகன்லால் விஜய்யைதான் அரசியலில் வளர்க்க விரும்புகிறார். ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு என்று அப்பா தன்னை வெறுப்பதாக கருதிக்கொள்ளும் மகத் , கடுப்பாகி ஹாஃப் ஹாஃபாக சரக்கடித்து, ஃபுல் போதையில், மோகன்லாலிடம் பணிபுரியும் பாஷா என்பவரின் மகளை கதறக் கதற…
இந்த அடாத செயலுக்காக மகத்தை தண்டிக்க வேண்டுமென்று விஜய் போர்க்கொடி தூக்குகிறார். விஜய்யை போட்டால்தான் தான் உயிரோடு இருக்க முடியுமென்று மகத் அவர் மீது கொலைமுயற்சியை நடத்துகிறார். விஜய் இதிலிருந்து தப்பிக்க, மிருகமாக மாறிவிட்ட மகத் என்ன செய்கிறோம் என்பது புரியாமல் பூர்ணிமாவின் மகளையும் (அதாவது விஜய்க்கு டைரக்ட், மகத்துக்கு இன்டைரக்ட் அக்காவை), அவரது கணவரையும்கூட போட்டுத் தள்ளிவிடுகிறார். அக்காவை இழந்த விஜய் எரிமலையாய் வெடிக்கிறார். தன்னுடைய மகளை கற்பழித்துக் கொன்ற மகத்தை ஒழிக்க வேண்டுமென்று விஜய்யோடு மோகன்லாலின் நம்பிக்கைக்குரிய சகாவான பாஷாவும் கரம் கோர்க்கிறார். மகத்தை போட்டுத் தள்ளுகிறார் விஜய்.
தூங்கிவிடாதீர்கள். ட்விஸ்ட் மிச்சமிருக்கிறது.
இதுவரை படத்தில் காட்டப்பட்டது மாதிரி மோகன்லால் அவ்வளவு பெரிய யோக்கிய கொண்டையெல்லாம் கிடையாது. தன் ரத்தத்தில் பிறந்த மகனான மகத்தை நன்றாக வாழவைக்க, விஜயை ஒரு பலியாடாகதான் வளர்த்துக் கொண்டிருந்தார். விஜய்யின் ஒரிஜினல் தந்தை அரசியல் கலவரத்தால் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டதும் பொய். அவரை கொன்றவரே மோகன்லால்தான் என்று பழைய கதைகளை தெரிந்த பாஷா சொல்கிறார்.
க்ளைமேக்ஸ்.
மோகன்லாலை பார்க்க வருகிறார் விஜய். இவரை எதிர்கொள்ள முடியாமல் கூசிப்போகும் மோகன்லால், “நல்லவன், கெட்டவன் பாகுபாடெல்லாம் உலகத்தில் இல்லை. இலட்சியங்களை அடைய அனைவரும் சிறு சிறு தவறுகளை செய்தவர்கள்தான்” என்று தன்னுடைய கடந்தகால தவறுகளுக்கு சப்பைக்கட்டு கட்டுகிறார். விஜய்யிடம் தன்னுடைய பழைய விஷயங்களை எல்லாம் போட்டு கொடுத்துவிட்ட பாஷாவை போட்டுத் தள்ளுமாறு ஆணையிடுகிறார். அதை மறுக்கும் விஜய், மோகன்லாலின் காலில் விழுந்து வணங்கி “யார் என்ன சொன்னாலும் நீ மட்டும்தான் என் அப்பா. என்னோட ஒரிஜினல் அப்பன் இப்போ உயிர்பிழைச்சி வந்தாலும் கூட, உன்னைதான் என் அப்பனா ஏத்துப்பேன். ஏன்னா நீ என்னை அப்படி வளர்த்திருக்கே” ரேஞ்சுக்கு எட்டு, பத்து நிமிஷத்துக்கு முழம் முழமாய் செண்டிமெண்டை கொட்டி வசனம் பேசுகிறார். அவரும், பாஷாவும் சில்லவுட்டாக தனியாக இருக்கும் மோகன்லாலை விட்டுக் கிளம்புகிறார்கள்.
இளைய தளபதியின் லாங் டயலாக்கை கேட்டு உலகத்தையே வெறுத்துவிட்ட மோகன்லால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு சாகிறார்.
2007ல் ‘பிரஸ்தானம்’ என்கிற பெயரில் சாய்குமார், சர்வானந்த் நடிப்பில் தெலுங்கில் வெளியான திரைப்படம் இது. தமிழில் இதுதான் ‘ஜில்லா’வாகிறது. பாலகிருஷ்ணாவின் ஆல்டைம் ப்ளாக்பஸ்டரான ‘சிம்மா’ ரிலீஸ் ஆன தேதியில் பிரஸ்தானமும் ரிலீஸ் ஆகித் தொலைத்ததால் படுதோல்வி அடைந்தது. வேறு தேதியில் ரிலீஸ் ஆகியிருந்தாலும் தோல்வி அடைந்திருக்கும். சாய்குமாரின் நடிப்பு மட்டும் நன்றாக பேசப்பட்டது. அவருக்கு அவ்வருடத்துக்கான ஃபிலிம்பேர், நந்தி விருதுகள் இப்படத்தில் நடித்ததற்காக கிடைத்தது. சில காலம் முன்பு இப்படம் ‘பதவி’ என்கிற பெயரில் டப் ஆகி தமிழிலும் ரிலீஸ் ஆனது. வந்த சுவடே யாருக்கும் தெரியவில்லை.
பின்னணி இப்படியிருக்க, ‘வேலாயுதம்’ ஷூட்டிங்கில் ஜெயம் ராஜாவின் உதவியாளராக இருந்த நேசன் சொன்ன மதுரைப் பின்னணி கதை ரொம்பவும் பிடித்துப்போய் ‘ஜில்லா’வில் நடிக்க விஜய் ஒப்புக்கொண்டதாக கதையளக்கிறார்கள். தெலுங்கு ரீமேக் என்று சொல்லிக் கொள்வதற்கு என்ன தயக்கமென்று தெரியவில்லை. தெலுங்கில் ஹீரோவுக்கு ஜோடியில்லை. இதில் சேர்த்திருக்கிறார்கள் போல. நேசன் ஏற்கனவே ‘முருகா’ என்கிற படத்தையும் இயக்கியிருக்கிறார். விஜய்க்கு நல்ல ஸ்க்ரிப்ட் கேட்க தெரியவில்லை. தமிழில் விஜய் நடித்தால் ஷ்யூர் ஹிட் என்று சொல்லிக்கொள்ளக் கூடிய ஏராளமான படங்கள் சமீபமாகவே தெலுங்கில் வந்திருக்கின்றன. அப்படியிருக்கையில் அரதப்பழசான சப்ஜெக்ட்டுகளை ஏன்தான் குறிவைத்து தேர்ந்தெடுக்கிறாரோ தெரியவில்லை.

வீரம் சினிமா விமர்சனம் | Ajith's Veeram 2014 Movie Review

தங்களது 100வது தயாரிப்பாக தரமான ஒரு குடும்பத்துடன் சந்தோசமாக பார்க்க வல்ல படத்தை கொடுத்த ‘வியஜா பிரொடக்‌ஷன்’ வெருமனையே 50 செக்கன்களில் தக்களுக்கான அறிமுகத்தை கொடுத்து படத்தை ஆரம்பிக்கின்றது. இதில் கவனிக்க வேண்டியது எம்.ஜீ.ஆர் இன் படம் அடுத்து ரஜினியின் படம் என்று வரிசையில் காட்டிய பின்னர் ‘விஜயா பிரொடக்‌ஷன்’ வழங்கும் அஜித்குமாரின் வீரம் என படத்தின் எழுத்தோட்டம் தொடங்குகின்றது! அப்போதே படத்தின் வெற்றியை சொல்லாமல் சொல்லி முடிக்கின்றது தயாரிப்பாளர் நிறுவனம்!!!
படத்தில் அஜித்துக்கு நான்கு தம்பிகள்.(இது எல்லோருக்கும் தெரிந்ததே..!!!) படம் ‘ஒட்டச்சரித்திரம்’ என்ற இடத்தில் இருந்து ஆரம்பிக்கின்றது. படத்தில் தம்பிகள் தான் தனக்கு எல்லாமாக வாழும் அண்ணன். அண்ணன் தான் தங்களுக்கு எல்லாம் என்று வாழும் தம்பிகள். படத்தில் அஜித், 4 தம்பிகள் ஊருக்குள் அநியாயம் செய்யும் எல்லோரையும் ‘சாப்பாடு போட்டு அதன் பின்னன் வெளுத்து வாங்குகின்றார்’ ஏங்க சாப்பாடு போட்டு சாப்பிட்ட பின்னர் வெளுக்குறீங்கண்ணு ஒருவர் கேட்க ‘ஏன்னா… எங்க அடிய வாங்க தெம்பு வேணும்…அதுக்காகத்தான்’ என்று பதில் சொல்லும் அஜித் படத்தின் இன்னொரு எம்.ஜி.ஆர் தான். இவர்கள் இப்படி வம்பை விலைக்கு வாங்க… பொலீஸ் இவர்களை பிடிக்க வர அவர்களுக்கு முன் ஜாமீன் எடுத்தே வைக்கும் வக்கீல் கதாப்பாத்திரத்தில் சந்தானம் வருகின்றார். படம் முழுவதும் அஜித் சந்தானம் கூட்டனி சிரிக்க வைக்கின்றது என்பது இன்னும் கவனம் செலுத்த வேண்டியது.
அஜித்துக்கு கல்யாணம் பிடிக்காது அதுக்கான காரணமாக அஜித் சொல்லு காரணம் ‘பொண்ணு என்னவள் நம்ம வாழ்க்கைக்குள் வந்துட்டா அவளுக்கா நாம மாற வேண்டி இருக்கும், நமக்காக அவ மாற வேண்டி இருக்கும்.. ஏன் இந்த கஸ்டம்… நாம நாமாவே இருப்பம்’ என்பது. இது மட்டும் இல்லாமல் பொண்ணு ஒருத்தி வாழ்க்கைக்குள் வந்தா அண்ணன் தம்பிகள் ஒண்ணாக இருக்க முடியாது என்பதாலும் அஜித் கல்யாணத்தை வெறுக்கின்றார். இதனால் தம்பிமார்களும் கல்யானத்தை வெறுக்கின்றார்கள். ஆனால் தம்பிகளுக்கு கல்யாண ஆசை ஒரு கட்டத்தில் வர அண்ணன் கல்யாணம் செய்யாமல் தாங்க எப்படி கல்யாணம் செய்வது!!! என்ற குழப்பம். அஜித்தின் நீண்ட நாள் நண்பனான ஒட்டச்சரித்திர ஊரின் கலெட்டரான ‘ரமேஸ் கண்ணாவின்’ உதவியுடன் அஜித்துக்கு சின்ன வயதில் ‘கோப்பெருந்தேவி’ ‘கோபு’ என்ற பெண்ணின் மீது அல்ல அந்த பெயரின் மீது ஒரு ஈடுபாடு இருந்தது தெரியவருகின்றது. அப்போதுதான் தமன்னாவின் அறிமுகம்.
இந்த இடையில் விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் கஜினி பட வில்லன் ‘வீரம்’ படத்தின் முற்பாதியில் வில்லனாக வருகின்றார். இவர்தான் எல்லா அநியாயங்களையும் செய்யும் நாசக்காரன். இவரை அஜித் எதிர்க்கும் காட்சிகளாக இருக்கட்டும், அஜித் தம்பிகள் இவரின் ஆட்களுடன் சண்டை போடும் காட்சிகளாக இருக்கட்டும் சிவா மிரட்டி இருக்காரு. சண்டைன்னா மாஸ்ன்னா எப்ப்படீடீ எடுக்கணும் என்று அவர்கிட்ட படிக்கனும். ‘நா…ம்ம்ம் சொன்னா நாலு பேரும் உன்ன உழுதுடுவானுக..’ என்று அஜித் சொல்லும் போது காதுகள் கிழியுது… என்னமா விசில் அடிக்குறானுக…!!!
தமன்னா படத்தில் சிற்பங்களுக்கு வர்ணம் தீட்டும் கதாப்பாத்திரம். இவரை தம்பிகள் தேடிப்பிடித்து ரமேஸ் கண்ணாவின் உதவியுடன் அவர்களின் ஊரில் உள்ள கோவில் சிலைகளுக்கு வர்ணம் தீட்ட அழைத்து சென்று தங்கள் வீட்டுக்கு பக்கத்தில் குடி வைப்பதில் இருந்து படத்தில் ரொமான்ஸ் ஆரம்பிக்கின்றது! அதில் ஒரு கட்டத்தில் தமன்னாவின் குழு ராமன், சீதை ராமனின் தம்பிகள் இருக்கும் ஒரு சிலைக்கு வர்ணம் தீட்ட முற்படும் போது ஒவ்வொரு சிலையயியும் தனித்தனியாக பிரித்து வேலை செய்தால் இலகுவில் முடித்துவிடலாம் என்று ஒருவர் சொல்ல… ‘இல்லை ராமன் மனைவி தம்பிகள் என்று இருக்கும் இதை வர்ணம் தீட்ட கூட பிரித்து வைத்து தீட்ட கூடாது’ என்று தமன்னா சொல்ல அதை கேட்டுகொண்டிருந்த அஜித்தின் கல் மனதுக்குள் காதல் மெதுவாக வசப்படுகின்றது.
அஜித், தம்ன்னா காதலிக்கின்றார்கள். தமன்னாவின் அப்பாவின் சம்மதம் வாங்குவதற்காக ஊருக்கு செல்கின்றார்கள். அது ஒரு திருவிழா காலம், இப்பதான் படத்தில் முக்கிய திருப்பம். தமன்னாவின் அப்பா நாசர். இவர் ஒரு குட்டி காந்தி போல படத்தில் வருகின்றார். அகிம்சை மட்டும்தான் இவருக்கு பிடிக்கும், சண்டை என்றால் அலர்ஜிக் என்னும் கதாப்பாத்திரம். இவர் அஜித்தை ஏற்பாரா இல்லையா? என்பதும் படத்தின் விறுவிறுப்பை கூட்டுகின்றது. அஜித் ஊருக்கு செற்று அங்கு வரும் பிரச்சனைகள் யாரால் யாருக்கு வரும் பிரச்சனைகள் என்று தெரிந்து தனி ஆளாக வென்று முடிக்கின்றார்.!!! ஊருக்குள் வரும் சண்டையில் அஜித் சொல்லும் வசனங்கள் யாருப்பா அவங்க என்ன கேட்டாங்க? என்று நாசர் அஜித்திடம் கேட்க… ‘சுடுகாட்டுக்கு எப்படி போகனும்ன்னு கேட்டாங்க… நான் அனுப்பி வைத்துட்டன் போய் சேந்திருப்பாங்க’ என்று சொல்லு வசமாக இருக்கட்டும். சின்ன குழந்தையிடம் ‘நீ எட்டு வரைக்கும் எண்ணு நான் எல்லோரையும் காலி பண்ணீடுறன்’ என்றூ சொல்லும் வசனமாக இருக்கட்டும். படத்தின் மிடுக்கிற்க்கு இன்னும் பலம் சேர்த்தது.
படத்தின் பாடல்கள்… அதிலும் முதல் பாடல் மனுஷன் எம்.ஜீ.ஆர் தான்பா என்று பக்கத்த இருக்க அண்ண சொல்லும் அளவுக்கு சர மாரியா இருந்தீச்சூ.. அதில் அஜித் ஆடும் குத்து ஆட்டம் சொல்ல வார்த்தை இல்லை… தல குத்துன்னா குத்துதான்… அடுத்து தங்கமே தங்கமே பாடல்… படத்தில் மெலடிலையும் மிரட்டி இருக்காரு தேவி ஸ்ரீ பிரசாத்… அந்த பாட்டுக்கான காட்சியமைப்புக்கள் சுவிஸ்சில் எடுக்கப்பட்டது இன்னும் இதமாக இருந்தது. படத்தில் ஜிங் ஜிக்கா பாடல் மிகவும் பொருத்தமான இடத்தில் வரும்… நல்ல ஒரு காட்சியமைப்பு… பரவை முனியம்மாவுக்கு ஒரு றீ என்ரிரி… பின்னனி இசை பத்தி சொல்லவே தேவையில்லை… சும்மா அதிருது…
படத்தில் காமடி… சந்தானம் இருக்கின்றார். அதுகும் சிறுத்தை சிவா இயக்கத்தில் என்னும் போது எதிர்பார்ப்பு அதிகமாகியது. சும்மா சொல்ல கூடாதுப்பா… என்னா கெமிஸ்ரி என்னா கெமிஸ்ரி… இது போதாதுன்னு நாசரின் சொந்தகாரராக தம்பி ராமையா… முதல் பாதியில் சந்தானம் ரசிகர்களின் வயிரை சிரிச்சே புண்ணாக்க… இரண்டாம் பாதியில் தம்பி ராமையா பார்த்துகொள்கின்றார். படத்தின் என்ன இல்லை எல்லாம் நிறைந்த ஒரு குடுப்ப படத்தை குறைந்த நாட்களுக்குள் தரமாக எடுத்துக்கொடுத்த சிவாக்கு பெரிய ஒரு கும்பிடு… நீங்க அடித்த மொட்டை வீண் போகல பாஸ்… கீப் ரொக்கிங்…!!! வீரம் கொவிங் டு கிற் த ஸ்கை!!!
“எதிரியா இருந்தாலும் அவ நெஞ்சில குத்தனும்டா…” 7 வருட காத்திருப்புக்கு கிடைத்த பெரிய வெற்றி… தில்லா சொல்லுவேண்டா… வீரம் கெத்துன்னு!!! தீபாவளியும் நமதே பொங்கலும் நமதே…!!!
“வீரம் – அஜித் படத்துக்கு மட்டும் பொருத்தமான தலைப்பு!!!”

Recent Posts